பொருளாளர் இல்ல திருமணவிழா! தலைவர்கள் நேரில் வாழ்த்து!
இராஜகம்பள சமுதாய நலச்சங்க பொருளாளர் R.கணேசன் இல்ல திருமண விழாவில் சமுதாய தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதன் விவரம் வருமாறு,
கோவை வடக்கு மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க பொருளாளர் மாசநாயக்கன்பாளையம் R.கணேசன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி பொள்ளாச்சி - பாலக்காடு இவரது சாலையிலுள்ள டாக்டர்.எம்.சி. வேலுச்சாமி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. தலைவர்கள் இதில் கலந்து கொண்டு மணமக்கள் சஞ்சீவ் - திவ்யப்பிரியா ஆகியோரை வாழ்த்தினர்.
தெலுங்கு மக்கள் கட்சி தலைவர் C.J.இராஜ்குமார், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, தலைமை நிலையச் செயலாளர் மணி, பொருளாளர் சின்னுச்சாமி, அமைப்புச் செயலாளர் திருச்செங்கோடு சரவணன், தங்கவேல் உள்ளிட்டோர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், கொ.ப.செ. ஆர்.ஏ.கணேசன், மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி, மாவட்ட தலைவர் குணசேகர், மாவட்டச் செயலாளர்கள் வெங்கடேஷ்குமார், மனோகரன், மாவட்ட பொருளாளர் தர்மபிரகாஷ், துணைச் செயலாளர்கள் சுரேஷ்குமார், சந்திரசேகர், மோகன்குமார், துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், சதீஷ், புஷ்பராஜ், ராஜமூர்த்தி, வரதமணி, ராஜேஷ்குமார், இளைஞரணி செயலாளர் குணசேகர், அய்யாசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணி, காளிமுத்து, ராஜன், கிட்டுச்சாமி, இராஜேந்திரன், படையப்பா, ராஜகோபால், ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் மக்கள் குரல் செந்தில்குமார், மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் சாவித்திரி, ஜெயந்தி இந்திராணி, மகளிர் அணி செயற்குழு உறுப்பினர்கள் நஞ்சாத்தாள், சுமதி பரமசிவம், தேவகி உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.
மேலும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கணேசன், V.N.ரவி, கார்த்திகா குமரேசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாசிலாமணி, புவனேஸ்வரி சரவணகுமார், ஈச்சனாரி மகாலிங்கம் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள், ஆ.பி.பூபதி, ராஜன், முத்துச்சாமி நாயக்கர், ஊர்நாயக்கர் ஜெயராமன், பிரபு, முருகானந்தம், முத்துமாணிக்கம் உள்ளிட்ட சமுதாய தலைவர்களும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தவிர, சென்னை வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், கட்டபொம்மன் பர்பிள் கிளப் உறுப்பினர்கள் மாச்சநாயக்கன் பாளையம் சிவசாமி, கணேசன், சுந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.