மோதூர் முனுசாமி இல்ல திருமண விழா!
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில காப்பாளரும், இராஜகம்பளத்தார் சமுதாய முன்னோடி தலைவர்களில் ஒருவருமான மோதூர் P.முனுசாமியின் அவர்களின் பெயரன் Er.S.கோகுல் - திருப்பூர் தொட்டிய மண்ணரை S.கனகராஜ் அவர்களின் புதல்வி K.மஞ்சுளா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நாளை (31.05.2023) மாலை திருப்பூரில் நடைபெறவுள்ளது.
த.வீ.க.பண்பாட்டுக் கழக மாநில அவைத்தலைவர் தொழிலதிபர் பி.எஸ்.மணி தலைமையில் நடைபெறவுள்ள வரவேற்பு விழாவில் கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.பவுல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், த.வீ.க.பண்பாட்டுக் கழக நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வருகை தரவுள்ளனர்.
இல்லற வாழ்வில் இணையேற்கும் மணமக்களுக்கு வீ.க.பி.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தகன் சார்பில் பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.