அகில இந்திய பொதுச்செயலாளர் இல்லத் திருமண விழா! நேரில் வாழ்த்து.
தெலுங்கான மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், அகில இந்திய யாதவ மகாசபையின் பொதுச்செயலாளருமான திரு.லட்சுமண் யாதவ் இல்ல திருமணவிழா நேற்று (புதன்கிழமை, 07.06.2023) மாலை ஹைதராபாத் மாநகர் அருகேயுள்ள நாகோல், சுபம் கன்வென்சன் ஹாலில் நடைபெற்றது.
திரு.லட்சுமண் யாதவ் மகன் நரேஷ் யாதவ் B.Tech - பாக்யஸ்ரீ M.B.A ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
சுமார் 50 ஏக்கர் பரப்பளவின் நடுவே அமைந்துள்ள சுபம் கன்வென்சன் ஹாலில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அகில இந்திய தலைவர்களும், தெலுங்கான மாநில அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பதினைந்தாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டர்.
இத்திருமண விழாவில் கலந்துகொண்ட நலச்சங்க பொதுச்செயலாளருக்கு பாரம்பரிய முறைப்படி தலைப்பாகை அணிவித்து வரவேற்றனர்.