இன்ஸ்பெக்டர் இல்ல திருமணவிழா - தலைவர்கள் நேரில் வாழ்த்து!
சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த தலைவரும், காவல்துறை ஓய்வுபெற்ற ஆய்வாளருமான திரு.காளியப்பன் இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை ரெட்ஹில்ஸ் தனலட்சுமி மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்டம், மு.மாவட்ட கவுன்சிலர் துரைபாண்டி, விருதுநகர் மாவட்டம் எரிசநத்தம் சங்கையா, மதுரை கப்பலூர் ராஜேந்திரன் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்கள் இராஜேந்திர பிரசாத்-அர்ச்சனா ஸ்ரீ ஆகியோரை வாழ்த்தினர்.
அதேபோல் வீ.க.பொ.இராஜகம்டள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தலைவர் இராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் பெருமாள், மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், மண்டல பொறுப்பாளர்கள் குருசாமி, செல்வராஜ், தங்கவேல், எஸ்.எஸ்.செல்வராஜ், முகப்பேர் இராஜா, குருசங்கர், ஈரநாகு மற்றும் தொழிலதிபர் முத்துக்குமார், ஆசிரியர் ஆனந்த பூபதி, அர்ஜூன், வேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்