🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பண்பாட்டுக்கழக மாநில பொதுச்செயலாளர் இல்ல திருமணவிழா! சமுதாய தலைவர்கள் வாழ்த்து செய்தி

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளரும், திருப்பூர் மாவட்ட தி.மு.க பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளருமான திரு.க.இராமகிருஷ்ணன் இல்லத் திருமண விழா வரும் 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பூர் வேலம்பாளையம் ரிங் ரோடு சிறுபூலுவப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சந்ரா மஹாலில் நடைபெறவுள்ளது.


முன்னதாக 19.03.2023, சனிக்கிழமை அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை மேற்படி மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திருமண ஏற்பாடுகளை மணமகன் மற்றும் மணமகள் வீட்டார்கள் செய்து வருகின்றனர்.

திருமண நிகழ்வையொட்டி பண்பாட்டுக் கழகத்தின் பொதுச்செயலாளரும், மணமகனின் தந்தையுமான க.இராமகிருஷ்ணன்  மாநிலம் முழுவதும் சென்று சமுதாய தலைவர்கள், உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்து வருகிறார்.


இதனையடுத்து மணமக்கள் இரா.கலைவாணன் M.Sc., (FDM) - கி.சோனா சின் M.Sc., (FDM) ஆகியோருக்கு சமுதாய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாரம்பரியமும், பண்பாடுமிக்க கம்பளத்தார் சமுதாயத்தின் இளந்தளிர்கள் இல்லாற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் வைபவத்திற்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றதில் மகிழ்ந்தோம்.

இளம் தலைமுறையினர் இல்லற வாழ்வை வெற்றிகொள்ள தடுமாறி வரும் நெருக்கடியான காலத்தில், நமது சமுதாயத்திற்கே உண்டான தனிச்சிறப்பும், வாழ்வியல் நெறிமுறைகளும் மணமக்களுக்கு ஒளி விளக்காய் அமையும் என்பதில் ஐயமில்லை. இல்லறம் என்பது மனித குலத்தோடு நெடிய தொடர்புடைய பழைய பாதை, வாழ்க்கையின் இடையே தொடங்கினாலும் இறுதி வரை நீண்டு, இந்த மனித பிறப்பை முழுமையாக்கி, முக்தி பெறச்செய்வது. அன்பு கொண்ட இதயங்கள் இணைந்து சுகம் காணும் இல்லறவாழ்வின் ஒவ்வொரு நாளும் ஆயுளைக்கூட்டும் அருமருந்து. இல்லற வாழ்வின் காணும் சுகங்களையும், அற்புதங்களையும் மணமக்கள் கலைவாணன்-சோனா சின் ஆகியோர் முழுமையாக  ஆண்டு அனுபவித்து, நமது பாரம்பரியத்தை வெற்றிகொள்ளச் செய்வதோடு, பின்வரும் தலைமுறயினருக்கு எடுத்துக்காட்டாக விளங்கி, சமுதாயத்திற்காக பாடுபட்டு வரும் நண்பர் இராமகிருஷ்ணன் அவர்களின் புகழுக்கு மேலும் வலுசேர்க்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் மலைராஜன், சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இராமராஜ், இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், பொருளார் எஸ்.இராமராஜ் உள்ளிட்டோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved