இராஜகம்பள சமுதாய நலச்சங்க குடும்ப திருமண விழா!
சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டல பொறுப்பாளரும், மூத்த முன்னோடிகளில் ஒருவருமான திரு.என்.ஆண்டிமுருகன் இல்ல திருமணவிழா வரும் திங்கள்கிழமை (21.08.2023) அன்று காலை நடைபெறவுள்ளது.இதன் விவரம் வருமாறு,
தூத்துக்குடி மாவட்டம், அவனியாபர நல்லூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட திரு.என்.ஆண்டி முருகன் - திருமதி.ஏ.வெள்ளைத்தாய் தம்பதியினர் 40 ஆண்டுகளுக்கு முன் சென்னை மாநகருக்கு குடியேறி, முகப்பேர் பகுதியில் வசித்துவருகின்றனர். தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தை சென்னையில் வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்காற்றிய ஆண்டி முருகன், பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநாடுகளுக்கு சென்னை பகுதி சமுதாய உறவுகளை பெருமளவில் திரட்டி, தனிப் பேருந்து ஏற்பாடு செய்து கலந்துகொள்வார். தொடர்ந்து சமுதாயப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர், 2006-இல் சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தை தோற்றுவிக்கவும், அதை வளர்த்தெடுக்கவும் அரும்பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கத்தின் தொடக்ககால தலைவர்களில் ஒருவராகவும், மண்டல பொறுப்பாளர்களில் ஒருவராகவும் தற்போதும் இடைவிடமால் திரு.ஆண்டி முருகன் சமுதாயப் பணியாற்றிவருகிறார்.
இவரின் அன்புமகன் ஏ.ஆறுமுக நைனார் B.B.M., புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான காங்கினிசன்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னை, நொளாம்பூர் பகுதியைச் சேர்ந்த எம்.அஸ்வினி ப்ரியங்கா.B.E., க்கும் திருமணம் வரும் 21.08.2023 திங்களன்று காலை 8-10.30 மணிக்குள் வடபழனி முருகன் திருக்கோவிலில் நடைபெறவுள்ளது. முன்னதாக வரவேற்பு 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் முகப்பேர் செங்கை மீனாட்சி மஹாலில் நடைபெறவுள்ளது.
மண்டல பொறுப்பாளர் இல்ல திருமண விழாவிற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சென்னையா நாயக்கர், முன்னாள் செயலாளர் சுப்பையா, ஆலோசகர்கள் நல்லையா, சுப்பையா JR, குருசாமி, செல்வராஜ், சுந்தர்ராஜ், தங்கம், செல்வராஜ், முருகன் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மண்டல பொறுப்பாளர் இல்ல திருமணத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று கலந்துகொள்ளுமாறு நிர்வாகம் அழைப்புவிடுத்துள்ளது.