தமிழர் திருநாள் - தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்
தொட்டிய நாயக்கர் - இராஜகம்பளம் சமுதாய உறவுகள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
மேய்ச்சல் சமூக வாழ்வியலில் கால்நடைகளோடு ஒட்டி உறவாடி வாழ்ந்த கம்பளத்தார், இந்திய நிலப்பரப்பை சீர்திருத்தி செம்மையாக்கி உலகுக்கு உணவளித்த மூத்த குடி சமூகங்களின் ஒன்று. நாடோடிகளாகவும், விவசாயக்குடியாகவும், கோனாகவும் வாழ்ந்த குடி அறிவுக்குடியாய் உலகை ஆளும் நாள் வெகுதொலைவில் இல்லை.
தை பிறந்தாள் வழி பிறக்கும் என்பார்கள். இதோ கம்பளத்தார் மீண்டும் எழுச்சிபெறும் தைத்திங்கள் திருநாளாக இந்நாள் அமையட்டும். ஒன்று பட்டு வென்றிடவே தைத்திங்களில் உறுதியேற்போம்.