தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
நன்கொடையாளர் திரு,நம்பிராஜ் இல்லத் திருமணவிழா!

நன்கொடையாளர் திரு,நம்பிராஜ் இல்லத் திருமணவிழா!

Radheyan 19 Feb 2026 | 10:20 PM
பகிர்:

இல்லற வாழ்வில் இணையேற்கும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நன்கொடையாளரும், ஈரோடு மாவட்ட திமுக பிரமுகருமான திரு,நம்பிராஜ் இல்லத் திருமண வரவேற்பு விழா இன்று நடைபெறுவதையொட்டி, மணமக்களுக்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், சதுமுகை அருகேயுள்ள தொண்ணேரங்கனூரைச் சேர்ந்தவர் திரு.நம்பிராஜ் (எ) எஸ்.டி.பழனிச்சாமி. வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நன்கொடையாளரான திரு.நம்பிராஜ் அவர்கள், பால முருகன் ஆட்டோ பைனான்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதோடு, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளராகவும் இருந்துவருகிறார். திரு.நம்பிராஜ் - திருமதி.வைஜெயந்தி ஆகியோரின் அன்புமகன் ப.கோகுல் பிரசாத் B.E., D.Co op.,  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பூசாரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு.செல்வராஜ் - திருமதி.நிர்மலா ஆகியோரின் அன்புமகள் செ.அனுரூபா B.Sc., ஆகியோரது திருமணம் 20.02.2026, வெள்ளிக்கிழமை மாரனூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் நடைபெறவுள்ளது.


முன்னதாக இன்று (19.02.2026, வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில் சத்தியமங்கலம் அத்தாணி சாலையிலுள்ள கொங்கு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பவுல்ராஜ், திரு.தங்கராஜ், திரு.பங்காருராஜ், திரு.மோகன், வழக்கறிஞர் திரு.சுரேஷ்குமார், திரு.விஜயகுமார், திரு.சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான  திரு.கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Nabiraj thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண