பொள்ளாச்சி - கொடை வள்ளல் - திரு.முருகானந்தம் காலமானார்.
சு.முருகானந்தம்
(தோற்றம்-09.07.1962 மறைவு - 03.06.2020)
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மண்ணூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், மாவட்ட தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவன இயக்குனரும்,அஇஅதிமுகழக ஊராட்சி செயலாளரும், மண்ணூர் கிராம ஊர் மணியகாரரும், பெருநிழக்கிழாரும், கொடை வள்ளலுமான திரு.முருகானந்தம் (58) அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், மண்ணூர் கிராம மக்களுக்கும் , கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்:
வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.