AMR.துரைச்சாமி அவர்களின் துணைவியார் காலமானார்- ஆழந்த இரங்கல்...
திண்டுக்கல் மாவட்டம்,பழனி தாலுகா, ஆயக்குடி ஐ.டி.ஓ, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் (ஓய்வு) திரு.AMR .துரைச்சாமி அவர்களது துணைவியார் திருமதி D.முத்துலட்சுமி அவர்கள் நேற்று (சனிக்கிழமை:19-12-2020) இரவு 8 மணியளவில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் இறுதிச்சடங்குகள் பச்சளநாயக்கன்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (20.12.20) மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.