🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திராவிட இயக்கப்பற்றாளர் கொடி துரை காலமானார்.

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக கழகப் பணியாற்றிக் கொண்டிருந்தவரும், கழகத்தின் மீதும் தலைவர் கலைஞர் அவர்கள் மீதும் தீராத பற்றும், பாசமும் கொண்டிருந்தவரும், கழகத்தின் சார்பாக நடைபெறும் மாநாடு, பொதுக்கூட்டம், போராட்டக்களம் என்று அனைத்து நிகழ்ச்சிகளும் தவறாது கலந்துகொண்டு கழகப் பணியாற்றுவது மட்டுமல்லாமல், எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் மிகப்பெரிய கருப்பு, சிவப்பு இரு வண்ண கொடியை கையில் ஏந்தி நிகழ்ச்சி முடியும்வரை  கொடியுடன் அமர்ந்திருப்பார். இதன் காரணமாக கழகத் தோழர்கள் அனைவராலும் கொடி துரை என்று அழைக்கப்பட்ட குறிச்சி தெற்குப்பகுதி 100 ஆவது வட்ட கழகத் தொண்டர் ஈச்சனாரி  திரு.துரைசாமி அவர்கள் இன்று (20.02.2021) அதிகாலை காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


தகவல் உதவி,

திரு.மகாலிங்கம்,

ஈச்சனாரி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved