அருப்புக்கோட்டை திரு.கு.இராமச்சந்திரன் அமரரானார்...
1938-2021. சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த ஆலோசகர் திரு மு.சுப்பையா (ஓய்வுபெற்ற இணை பதிவாளர்) அவர்களின் மைத்துனரும், மேற்படி சங்கத்தின் உறுப்பினர்களான திரு. து.ராதாரவி & திரு. சீ.சதிஷ் ஆகியோர்களின் பெரியப்பாவுமான அருப்புக்கோட்டை திரு.கு.ராமச்சந்திரன் (கூட்டுறவு தணிக்கை அலுவலர் - ஓய்வு) 10.05.2021 அன்று காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னார் பணியில் இருந்த போது பல்வேறு ராஐகம்பள சமுதாய சங்க பணிகளிலும், ஓய்வுபெற்ற பின் GAINTS என்ற சமூக நல அமைப்பின் மூலம் பல்வேறு நலப்பணிகளையும் செய்து வந்ததின் மூலம் அனைவரது நன் மதிப்பையும் பெற்றிருந்தார். மேலும் அவர் வசித்து வரும் திருக்குமரன் நகர் பகுதியில், ராஜிவ் காந்தி குடிநீர் திட்டப் பணியை நடைமுறைப்படுத்துவதற்கு சிறப்பாக திட்டமிட்டு செயல் படுத்தியுள்ளதன் மூலம் இப்பகுதி வாழ் மக்களின் அன்பைப் பெற்ற பெருந்தகையாளராவார். அவருக்கு திருமதி.தனலட்சுமி என்ற மனைவியும் திரு. தமிழ்ச்செல்வன் என்ற மகனும் திருமதி. ராமலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உற்றார்,உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.