🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பழனி ஆயக்குடி மு.பேரூராட்சி தலைவர் காலமானார்.

திண்டுக்கல் மாவட்டம்,  பழனி - ஆயக்குடி பேரூராட்சியின் முன்னாள் தலைவரும், திண்டுக்கல் மாவட்ட தி.மு.கழகத்தின் முக்கிய தளகர்த்தகர்களில் ஒருவரும், ஆயக்குடி பேரூர்கழக செயலாளருமான திரு.C.கார்த்திகேயன் (வயது-52) அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 

2006 முதல் 2011 வரை ஆயக்குடி பேரூராட்சியின் தலைவராக சிறப்பாக செயல்பட்டு மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றவர் திரு.கார்த்திகேயன் அவர்கள். சமுதாயத்தில் வளர்ந்து வரும் முக்கிய அரசியல்வாதியான திரு.கார்த்திகேயன் இளம் வயதில் காலமானது சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved