🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நம் தலைவர்கள் கொண்டாடிய பெரியாரின் 143-வது பிறந்தநாள்!

பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியில் உள்ள பெரியாரின்  திருவுருவ சிலைக்கு விடுதலை களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


பெரியாரின் 143-வது பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், சிங்களாந்தபுரம் பகுதியில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு விடுதலை களம் கட்சி நிறுவன தலைவர் கொ.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேசியவர் அனைத்து சமூக மக்களுக்கான  இட ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதில் மாவட்ட பொறுப்பாளர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன்,மாவட்ட மகளிரணி வசந்தாமணி மற்றும் விடுதலை களம் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் திராவிட முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த ஈச்சனாரி.மகாலிங்கம், அதிமுக வைச் சேர்ந்த அருப்புக்கோட்டை அ.காசிராஜன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved