அரைவேக்காட்டுத்தனமாக பேசாதே! சீமானுக்கு சமூகநீதி கூட்டமைப்பு கடும் கண்டனம்.
வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இத்தீர்ப்பு வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட அநீதி என்ற ரீதியில் கருத்து தெரிவித்தார். சீமானின் இந்தக்கருத்தை மறுத்துள்ள சமூகநீதி கூட்டமைப்பு, உண்மைநிலையை தெரிந்துகொண்டு சீமான் போன்றவர்கள் பத்திரிக்கைகளில் பேட்டியளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் அவதூறு, பொய் செய்திகளை பரப்புபவர்கள் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இராமசாமி வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டிருப்பதாவது...