தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
விவசாயிகளின் விடிவெள்ளியின் 37-வது நினைவுநாள்!

விவசாயிகளின் விடிவெள்ளியின் 37-வது நினைவுநாள்!

Radheyan 22 Dec 2021 | 04:38 PM
பகிர்:

சமீபகாலத்தில் விவசாயிகள் ஒன்று திரண்டு ஓராண்டுகள் டெல்லியை முற்றுகையிட்டு முடக்கியது போல், 1950-களில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை 16 மணி நேரத்திலிருந்து 4-மணி நேரமாக அன்றைய அரசு குறைத்த பொழுது யாராலும் ஒன்றிணைக்க முடியாத அவிழ்த்துவிடப்பட்ட நெல்லிக்காய் மூட்டைகள் என்று சொல்லப்படும் விவசாயிகளை ஒன்றிணைத்து, தமிழகத்தில் மாபெரும் போராட்டங்களை நடத்தி அன்றைய ஆட்சியாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தவர் அமரர். சி.நாராயணசாமி நாயுடு. கோவையில் விவசாயிககளை ஒன்றுதிரட்டி இவர் நடத்திய போராட்டத்தின் காரணமாக மீண்டும் விவசாயத்திற்கு 16 மணிநேரம் மின்சாரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் விவசாயிகளின் நலனுக்காக போராடியதோடு, இலவச மின்சாரம் வேண்டுமென போர்க்குரல் கொடுத்தவர் சி.நாரயணசாமி நாயுடு அவர்கள் 21.12.1984-இல் காலமானார்.

அன்னாரின் 37-வது நினைவுநாளையொட்டி (21.12.2021) கோவை அருகே, வையம்பாளையத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு விடுதலைக்களம் கட்சியின் சார்பில் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, விடுதலைக்களம் கட்சியின் பூவரசி இராஜேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண