🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாநில துணை அமைப்பாளராக ஸ்ரீதர் வேலுச்சாமி நியமனம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5 வது அமைப்புத்தேர்தல் கிளைக்கழகம் தொடங்கி தலைமைக் கழக நிர்வாகிகள் வரையிலான தேர்தல்கள் நடந்துமுடிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டமும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றதைத் தொடர்ந்து கட்சியின் துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் மாநில இலக்கிய அணி நிர்வாகிகள் பட்டியல் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் ஒப்புதலோடு அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதில் மாநில இலக்கிய அணியின் துணை அமைப்பாளராக விருப்பாச்சி கோபால நாயக்கரின் நேரடி வாரிசுகளின் ஒருவரான ஸ்ரீதர் வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீதர் வேலுச்சாமி அவர்களுக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங்கியதின் மூலம் கம்பளத்தாருக்கு தொடர்ந்து அரசியல் அரங்கில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிவரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும், தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ அவர்களுக்கும் மற்றும் கழகத்தின் முன்னனி நிர்வாகிகளுக்கும் கம்பளத்தாரின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved