தமிழகத்தை வெப்ப அலைகள் தாக்கும் அபாயம் - மனிதர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுத்தும்?
இந்திய வானிலை ஆய்வு மையம், மார்ச் 1ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, நடப்பாண்டின் மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் இயல்பைவிட அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை இத்தனை ஆண்டுகளாக இந்தியாவின் மத்தியப் பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இனி தென்னிந்தியாவிலும் வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் என 2023ல் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இதனால் வெப்ப அழுத்தம், வெப்ப வாதம், தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றி அமைப்பது, பணியிடங்களில் தூய்மையான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருவது, அவசரகால முதலுதவி வசதிகள் அளிப்பது, சுகாதாரத் துறையுடன் இணைந்து தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனையை உறுதி செய்வது, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மருத்துவ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். ஆலைகள் மற்றும் சுரங்கங்கள் தவிர்த்து கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீதும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
இது தேர்தல் காலம் என்பதால் அரசியல் கட்சிகள் அதிகளவில் பொதுக்கூட்டங்களை நடத்தக்கூடும். வெப்ப அலை வீசும் நாட்களில் பகல் நேரம் பொதுக்கூட்டங்கள் நத்துவது பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தாக அமையக்கூடும். 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் 16ஆம் தேதி நவிமும்பையின் கார்கரில் நடந்த அரசு விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்க வந்தவர்கள் மேற்கூரை இல்லாமல் வெட்ட வெளியில் அமர வைக்கப்பட்டதில் வெயிலின் பாதிப்பால் 13 பேர் உயிரிழந்தனர். வெப்ப அலை காலங்களில் திறந்தவெளியில் கூட்டம் கூட்டுவதை தவிர்த்திருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். 2023 ஜூன் மாதம் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 96 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தின் பாலியா எனும் ஒரு மாவட்டத்தில் மட்டும் 54பேர் உயிரிழந்தனர்.
2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெப்ப அலை பாதிப்பை எதிர்கொள்வதற்கான திட்டத்தை வெளியிட்டிருந்தது. நடப்பாண்டு எல்-நினோ ஆண்டாகவும் இருப்பதால், கணிக்கப்பட்டதைவிட அதிகமான வெப்பம் நிலவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் பொருட்டு உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக பல மாவட்டங்களில் இயல்பு வெப்பநிலை இயல்பைவிட 2°C முதல் 4°C வரை அதிகமாகப் பதிவாகி வருகிறது.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் எனவும் மண்டல வானிலை ஆய்வுமையம் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறது. கோடை வெப்பத்தின் தீவிரத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவக் கட்டமைப்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அண்மையில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெப்ப அலைகளுக்கு பின்வரும் அளவுகோல்களை வழங்கியுள்ளது:
ஒரு நிலையத்தின் அதிகபட்ச வெப்பநிலை சமவெளிகளுக்கு குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் அடையும் வரை வெப்ப அலையை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.
ஒரு நிலையத்தின் இயல்பான அதிகபட்ச வெப்பநிலை 40°Cக்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ இருந்தால், இயல்பிலிருந்து 5°C முதல் 6°C வரை கடுமையான வெப்ப அலைகள் இயல்பிலிருந்து 7°C அல்லது அதற்கு மேல் புறப்படும்.
ஒரு நிலையத்தின் இயல்பான அதிகபட்ச வெப்பநிலை 40°Cக்கு அதிகமாக இருக்கும் போது வெப்ப அலை இயல்பிலிருந்து 4°C முதல் 5°C வரை கடுமையான வெப்ப அலை இயல்பிலிருந்து 6°C அல்லது அதற்கு மேல் புறப்படும்.
இயல்பான அதிகபட்ச வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் உண்மையான அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாக இருக்கும் போது, வெப்ப அலைகள் அறிவிக்கப்பட வேண்டும். அதிக தினசரி உச்ச வெப்பநிலை மற்றும் நீண்ட, அதிக தீவிர வெப்ப அலைகள் காலநிலை மாற்றம் காரணமாக உலகளவில் அடிக்கடி அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இயற்கையில் அதிக தீவிரமான வெப்ப அலைகளின் நிகழ்வுகளின் அடிப்படையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை இந்தியாவும் உணர்கிறது, மேலும் மனித ஆரோக்கியத்தில் பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதனால் வெப்ப அலை உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அதிக தினசரி உச்ச வெப்பநிலை மற்றும் நீண்ட, அதிக தீவிர வெப்ப அலைகள் காலநிலை மாற்றம் காரணமாக உலகளவில் அடிக்கடி அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இயற்கையில் அதிக தீவிரமான வெப்ப அலைகளின் நிகழ்வுகளின் அடிப்படையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை இந்தியாவும் உணர்கிறது, மேலும் மனித ஆரோக்கியத்தில் பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதனால் வெப்ப அலை உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.