🔴 LIVE | முப்பெரும் விழா 2023


60 ஆயிரத்தை தாண்டுமா தங்கத்தின் விலை?

இந்தியாவை பொறுத்தவரை முதலீடு என்றால் அனைவரும் வாங்க நினைப்பது தங்கம்தான். மட்டுமன்றி இந்தியாவில் தங்க ஆபரணங்கள் அணிவதை பெருமையாகவும், உயர்வாகவும் கருதுவோரும் அதிகம். நிலைமை இப்படியிருக்க கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகி வருகிறது. 

உலக அளவில் அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. இதன் விளைவாக, இந்தியாவில் தங்கத்தின் விலை பெரும்பாலும் உலக விலை அளவிலேயே தீர்மானிக்கப்படுகிறது. தங்கத்தின் விலை நகரத்திலிருந்து நகரத்திற்கு சிறிது மாறலாம், ஆனால் உலகளாவிய விலைகளுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படும்.

வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7,000-ஐ தாண்டியது. ஒரு பவுன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 55,000-த்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் இன்னும் ஒருசில மாதங்களில் பவுன் ரூ. 60,000- ஐ கடக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

கடந்த ஆண்டு (2023) மே மாதம் தங்கம் விலை பவுன் ரூ.46,000-ஐத் தாண்டி விற்பனையானது. பின்னா் ஏற்ற இறக்கங்களைக் கண்டு வந்த தங்கம் விலை அந்த ஆண்டின் இறுதியில் (டிச.4) அதிரடியாக உயா்ந்து பவுன் ரூ.47,000-ஐ தாண்டி விற்பனையானது. கடந்த இரு மாதங்களாக அதிலிருந்து சற்று உயா்வதும், குறைவதுமாக இருந்து வந்த தங்கம் விலை ஏப்ரல் முதலாம் நாள் ரூ.51,640-ஆக இருந்தது நான்கே நாட்களில் ரூ.720 உயர்ந்து இன்றைய நிலவரப்படி ரூ.52,360-ஆக விற்பனையாகிறது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.46,000-லிருந்து ரூ.47,000-ஐ (ஆஅயிரம் ரூபாய்) தாண்ட சுமாா் 7 மாதகாலம் ஆன நிலையில் ரூ.51,000-த்தை (நான்காயிரம் ரூபாய்) வெறும் 3 மாத காலத்திற்குள் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபரணத்தங்கம் வாங்கும்போது தற்போது 3 சதவீதம் ஜி.எஸ்.டி. மற்றும் 10 முதல் 25 சதவீதம் வரை சேதாரத்திற்கான மதிப்பும் விலையுடன் சோ்க்கப்படுகிறது. இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7000 -ஐ தாண்டுகிறது. இது பவுன் கணக்கில் வாங்கும்போது சவரனுக்கு குறைந்தது ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதிகமாக நகைவாங்குவோா் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. தங்கம்த விலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை கடந்த ஜன.22 முதல் மத்திய அரசு 14.35 சதவீதம் அளவுக்கு உயா்த்தியது. மேலும் பணவீக்கம், அமெரிக்காவில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது மற்றும் அங்கு வட்டிவீதம் குறைக்கப்படாதது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டாலருக்குப்பதிலாக தங்கத்தை வாங்கிக்குவிப்பது போன்றவற்றால் தான் தங்கம் விலை தொடா்ந்து ஏறிவருகிறது என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இதன் மூலம் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்பதுடன், மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டது. எதிா்பாா்த்தது போலவே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. 

மேலும் தங்கம் விலை விரைவில் பவுன் ரூ.55,000 ஐ தாண்டும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து தங்க, வைர வியாபாரிகள் கூறுவது, உலகத்தில் உள்ள அனைத்து முதலீட்டாளா்களும் ஒருமித்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனா். அமெரிக்க உற்பத்தி திறன், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார குறியீடுகளில் சாதகமான சூழ்நிலை இல்லை என்பதே அதற்கு முக்கிய காரணம். இதே நிலை நீடித்தால் தொடா்ந்து அமெரிக்க பொருளாதாரம் சரியும் என்பதை கணித்து உலகின் பெரிய முதலீட்டாளா்கள் பலா் தங்கத்தை வாங்கத் தொடங்கியுள்ளனா். தங்கம் விலை இன்னும் ஒரு வார காலத்துக்குள் மேலும் பவுனுக்கு ரூ.800-ரூ.1000 வரை உயர வாய்ப்புள்ளது. கிராம் ரூ.2,000 இருந்த போது மக்களுக்கு தங்கத்தின் மீதிருந்த ஆா்வம் தற்போது கிராம் ரூ.6,500-க்கு விற்பனையாகும் போதும் சற்றும் குறையவில்லை. ஒரு சாராா் விலை மேலும் உயருமோ என்ற அச்சத்திலும், பலா் இதனை முதலீடாகவும் கருதி தங்கத்தை தொடா்ந்து வாங்கி வருகின்றனா். தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved