🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சீமானின் அரசியல் அஸ்தமனம் தொடங்கியது!

தமிழ் சினிமாவில் இயக்குநாராக வாழ்க்கையைத் தொடங்கி தொடர் தோல்விகளால் நிற்கதியாய் நின்ற சீமான், 2009 காலகட்டங்களில் திராவிட இயக்கமேடைகளில் ஏறி அரசியல் பக்கம் கரை ஒதுங்கியவர். ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் சாக்கில் புலம்பெயர் தமிழர்களிடம் "கல்லா" கட்டத்தொடங்கி, சி.ப.ஆதித்தனார் தொடங்கிய நாம் தமிழர் கட்சி தன் வயப்படுத்தி தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்தார்.


தன்னுடைய அரசியலுக்கு ஒரு எதிரியைக்காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் தெலுங்குமொழி பேசுவோரை "வந்தேறிகள்" என்றும், தமிழ்தேசியத்திற்கு எதிரானவர்களாகவும் கட்டமைத்தார். அரசியல் தெளிவும், முதிர்சியும் பெற்றோரிடம் சீமானின் இந்த அரசியல் எடுபடவில்லை என்றாலும், அரசியல் குறித்து தெளிவற்ற முதல்தலைமுறை வாக்காளர்களின் கணிசமான வாக்குகளைப் பெற்றார். முதன்முதலாக கம்பளத்தார்களையும், கம்பளத்து பாளையக்காரர்களையும் சகட்டுமேனிக்கு திட்டத்தொடங்கினார். இவரின் வாய் சாமார்த்தியத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்பிய பல கட்சிகளுக்கு வாயை வாடகைக்கு விட்டு கல்லா கட்டிப் பழகிப்போன சீமான் விமர்சிக்காத தலைவர்களோ, கட்சிகளோ இல்லை என்ற அளவில், இடத்திற்கும், பணத்திற்கும் தகுந்தாற்போல் அடிக்கடி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே உள்ளார். சீமானின் பேச்சு தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகிவரும் நிலையில், சமீபத்தில் தந்தைப் பெரியாரைப்பற்றி பேசியது கடும் விமர்சனத்திற்கும், ஏளனத்திற்கும் உள்ளாகி வருகிறது. சீமானின் பேச்சுக்கு எதிராக தமிழகத்தின் பல இடங்களில் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

தெலுங்குமொழி பேசுவோரையும், அமைதியாக வாழும் கம்பளத்தாரையும் இழித்தும், பழித்தும் பேசியதின் விளைவு சீமானின் அரசியல் எதிர்காலம் மங்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் தந்தைப்பெரியார் குறித்து சீமானின் பேச்சுக்கு முதுபெரும் தமிழ் ஆய்வறிஞர் பொ.வேல்சாமி ஐயா அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவரின் பதிவு பின்வருமாறு:

சீமானின் சில்லறைத்தனம்!

நண்பர்களே...

கடந்த இரண்டு நாட்களாக பொதுவெளியில் சீமானுடைய பொறுப்பற்ற பொறம்போக்கான பேச்சுக்கு பலரும் பலவகைகளில் எதிர்வினைகள் புரிந்து வருகின்றார்கள். மனசாட்சியே இல்லாமலும் எவ்விதமான சான்றையும் காட்டாமலும்  “தந்தைப் பெரியார்” மீது அக்கிரமமானதும் அவதூறு நிறைந்ததுமானதுமான பழிச்சொல்லை அள்ளி வீசியிருக்கிறார். இவ்வாறான சீமானின் பழிச் சொல்லுக்கு ஆதாரம் காட்டுவதாக அவருடைய அடிவருடிகளில் ஒரு சிலர் 02.06.1945 குடியரசில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையை எடுத்துக் காட்டுகின்றனர். 

இவர்களால் சுட்டிக் காட்டப்படுகின்ற “அந்தக் கட்டுரையில்” பெரியாரின் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டிற்கான ஆதாரம் எங்கே உள்ளது ?  அந்த அல்லக்கையர்கள் இக்கட்டுரையின் இறுதிபாராவில் கையாளப்பட்டுள்ள    “சமயோசிதம்”     என்ற சொல்லுக்குள் தங்களுக்கான ஆதாரம் “மறைந்து”ள்ளது என்கின்றனர்.   இவ்வாறான எத்தகைய அபத்தத்தையும் எளிதில் நம்பிவிடும் முட்டாள்கள் தங்களிடம் நிறைந்திருப்பதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்களா? .


இவர்கள் குற்றம் சுமத்துகின்ற இந்தக் கட்டுரையில் (02.06.1945) எங்கே இவர்கள் சொல்வது போன்று எழுதப்பட்டுள்ளது ? அப்படி ஒரு வாசகம் இல்லவே இல்லை. உண்மையில் அந்தப் பேச்சானது ஒரு சிறப்பான மானிடவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரையாகத்தான் எழுதப்பட்டுள்ளது. மார்க்சிய மூலவர்களில் ஒருவரான “எங்கல்ஸ்” எழுதிய “குடும்பம் தனிசொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்”  என்ற நூலிலும்    “சிக்மெண்ட் பிராய்டு” அவர்களுடைய மனித உளவியல் பற்றிய சிந்தனைகளிலும், தர்ஸ்டனுடைய “தென்னிந்திய குலங்களும் குடிகளும்” ( 7 தொகுதிகள் ) தொகுதிகளிலும்   அவரே எழுதியுள்ள இன்னொரு முக்கியமான நூலான “தென்னிந்திய மானிடவியல்” ( மணிவாசகர் நூலகம் வெளியீடு ) போன்ற சமூக மானிடவியல் சார்ந்த  ஆராய்ச்சி நூல்களின் பிழிவாகாத்தான் தந்தைப் பெரியாரின் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சமூக மானுடவியல் ஆய்வுக் கட்டுரையாக எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ளக்கூடிய “அறிவற்ற மனிதர்களான” இத்தகையவர்கள் இந்த நூலில் சொல்லாத ஒரு விசயத்தை தந்தைப் பெரியார் சொன்னதாகக் கதைகட்டி கதறுவதை “சுய அறிவுள்ளவர்கள்” அறிந்து கொள்ளாமல் இருப்பார்கள் என்று நினைத்து விட்டார்களா? .

குறிப்பு:

அவர்கள் சுட்டிக்காட்டுகின்ற அந்தக் கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன். 

குடும்பம் தனிச்சொத்து அரசு

https://archive.org/details/m000017_202401

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி ஒன்று

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2lup6&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 2

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1l8yy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%202#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 3

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1kMyy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%203#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 4

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1jxyy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%204#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 5

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl2lhyy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%205#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 6

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl2l8yy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%206#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 7

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1kxyy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%207#book1/

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved