கண்ணுக்குப்புலப்படாமல் எழுத உதவும் ரகசிய மை!

கண்ணுக்குத் தெரியாத மை என்பது ஒரு பழங்கால கண்டுபிடிப்பு, இது ஏற்கனவே 2,000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சதித்திட்டங்கள் அல்லது உளவு பார்ப்பதில் இருந்து ரகசிய காதல் கடிதங்களை எழுதுவது வரை அதன் நோக்கங்கள் பன்மடங்கு இருந்தன.
ரகசிய மை எப்படி தயாரிப்பது?
எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்துப் பிழிந்து அந்தச் சாற்றை ஒரு குச்சியில் தொட்டு எடுத்து ஒரு தாளில் எழுத வேண்டும்.
நீங்கள் விரும்பும் எந்த ஒரு வாக்கியத்தையும் அதிலே எழுதலாம். உங்கள் பெயர் அல்லது உங்களுக்குத் தோன்றுவதை எழுதலாம்.
எழுதி விட்டு சிறிது நேரம் அந்தத் தாளைக் காய வைக்க வேண்டும்.
இந்தச் சோதனையை தேன், பால், ஆப்பிள் ஜுஸ் அல்லது வினிகர் போன்றவற்றைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
என்ன நடக்கிறது? இதற்கான அறிவியல் காரணம்?
கண்ணுக்குத் தெரியாத மைச் செய்திகளை நாம் எழுதிய காகிதத்தின் இருபுறமும் லேசாக சூடாக்குவதன் (அயன்பாக்ஸ்) மூலம் உருவாக்கலாம். எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தி செய்தியை எழுதும்போது, சாற்றில் உள்ள கார்பன் சார்ந்த கலவைகள் காகிதத்தின் இழைகளால் உறிஞ்சப்படுகின்றன. மேலும், எலுமிச்சை சாறு (மை) பலவீனமான அமிலம் என்பதால், அது காகிதத்தில் உள்ள இழைகளை மென்மையாக்குகிறது. வெப்பத்தால் உலர்ந்த சாற்றில் சில வேதியியல் பிணைப்புகள் உடைந்து சில கார்பன் தளர்வாகிறது. கார்பன் காற்றோடு தொடர்பு கொள்ளும்போது, அது எரிந்து ஆக்ஸிஜனேற்றமாகிறது. ஆக்சிஜனேற்றத்தின் விளைவால் பொருள்கள் இருண்ட நிறமாக மாறும். (எல்லாப் பொருட்களுக்கும்) ஆக்சிஜனேற்றம் ஏற்பட வெப்பம் தேவையில்லை; அதற்கு கொஞ்சம் காற்று இருந்தால்கூட போதும். சிறிது நேரம் துண்டுகளாக்கிய ஆப்பிள், வாழைக்காய் அல்லது பேரிக்காயை ஒரு தட்டில் வைத்துப் பாருங்கள்.)
எலுமிச்சைச் சாறு – பெரும்பாலான பழச்சாறுகளைப் போல – கார்பன் சேர்மங்களைக் கொண்டுள்ளது. இந்தக் கலவைகள் அறை வெப்பநிலையில் மிகவும் நிறமற்றவை. வெப்பம் இந்தச் சேர்மங்களை உடைத்து கார்பனை வெளியிடுகிறது. கார்பன் காற்றோடு தொடர்பு கொள்ளும்போது (குறிப்பாக ஆக்ஸிஜன்), ஆக்சிஜனேற்றம் பெற்று அடர் பழுப்பு நிறமாக மாறும். நீண்ட நேரம் ஆக்ஸிஜனேற்றத்தால், அது கருப்பு நிறத்திற்கு மாறும்.
கண்ணுக்குத் தெரியாத இந்த மை வழியாக ரகசிய தகவல் (மெசேஜ்)களை அனுப்ப முடியும். (உலகப் போர், சிறை ரகசிய செய்திகள், சில முக்கியமான தரவுகளைத் தெரிவிக்கும் ரகசிய செய்திகள் போன்றவை. இப்படிக் கடத்தப்பட்டிருப்பதை வரலாற்றில் நாம் படிக்கலாம்.)