சவால் நிறைந்த வாழ்க்கை ஆயுளை அதிகரிக்கும் - ஆய்வில் உறுதி

1980க்களில் எவான்ஸ் எனும் வகை எலிகளை வைத்து சொகுசான வாழ்க்கைக்கும், கஷ்டம் நிரம்பிய வாழ்க்கைக்கும் இடையேயான வேறுபாடு குறித்து ஆராயப்பட்டது. இவ்வகை எலிகளின் வாழ்நாள் 2 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் லேபில் (Lab) வைத்து வளர்த்தால் இன்னும் சில மாதங்கள் கூடுதலாக வாழும்.
இதனடிப்படையில் ஒரு பகுதி எலிகளை லேபில் (Lab) வைத்து, வேளா வேளைக்கு சரியாக உணவளித்து, தன் இஷ்டம்போல் வாழவும், வளரவும் விட்டுவிட்டார்கள்.
இன்னொரு பகுது எலிகளை தினமும் 23 டிகிரி செல்சியஸ் குளிர்நீரில் நீந்த விட்டார்கள். தொடக்கத்தில் கொஞ்ச நேரம் நீந்திய எலிகள், குளிரால் தாங்காமல் நடுங்கின. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக குளிருக்கு பழகின. இதன் அடுத்தபடியாக குளிர்நீரில் இருக்கும் காலத்தை அதிகரித்து, நாள் ஒன்றுக்கு நாலு மணிநேரம் குளிர்நீரில் விட்டார்கள்.
குளிர்நீரில் நாலு மணிநேரம் இருந்ததால் அவற்றுக்கு நன்றாக பசித்து, 44% அளவுக்கு கூடுதல் கலோரிகளை எடுத்தன. ஒரு நாளைக்கு ஐந்து வேளை உணவு உண்பதற்கு சமம் இது.
அனைத்து எலிகளும் இயற்கையாக மரணம் அடைந்தபின் ஆய்வு முடிவடைந்தது.
ஜாலியாக வாழ்ந்த எலிகள் சராசரியாக 930 நாட்கள் வாழ்ந்தன. போஸ்ட்மார்ட்டம் செய்ததில், அவற்றில் 57% எலிகளுக்கு கான்சர் வரும் டியூமர்களின் வளர்ச்சி கூடுதலாக இருந்தது.
குளிர்நீரில் நீந்திய எலிகள் சராசரியாக 968 நாட்கள் வாழ்ந்தன. நூறாண்டு மனித வாழ்வில் கூடுதலாக நாலு ஆண்டுகள் வாழ்வதற்கு சமம் இது. அவற்றில் 24% எலிகளுக்கு தான் கான்சர் வரும் டியூமர்களின் வளர்ச்சி இருந்தது.
"வாழ்க்கையில் ஏதோ சவால் இருக்கவேண்டும்" என்பது ஆய்வின் கண்டுபிடிப்பு என ஒரு கருத்தாக்கம் உண்டு. குளிர்நீரில் இருந்ததால் அவற்றின் மெடபாலிசம் அதிகரித்து, வாழ்நாள் அதிகரித்தது என்பது இன்னொருவகை விளக்கம்.
அறிவியலில் இதன் பெயர் ஹார்மீசிஸ் (Hormesis) . சிறிய அளவிலான துன்பம் மற்றும் கஷ்டம் நம்மை மேலும் பலபடுத்தும். ஆனால் பல நூறாண்டுகளாக மக்கள் இதை அறிந்தே இருந்தார்கள்.
"எது உன்னை கொல்லாதோ, அது உன்னை வலுவாக்கும்" என நீட்சே இதைதான் குறிப்பிட்டார்.
நன்றி: நி.செல்வன்.