மக்கள் தொகை பெருக்கம், விண்கற்களால் பூமியின் எடை அதிகரிக்குமா?

புவியின் எடை (நிறை) அதிகரிக்குமா?
பூமியைப் பற்றி இதுவரை கண்டறியப்படாத பல ரகசியங்கள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் பூமியின் எடை. கிட்டதட்ட 750 கோடி மக்கள், பல கோடி உயிரினங்கள் மற்றும் 70 சதவீதத்திற்கும் மேல் கடல் என பூமியின் எடை எவ்வளவு என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது.
நிறை Vs. எடை :
நிறை மற்றும் எடைக்கு உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஒரு பொருளின் நிறை அதன் இடத்தைப் பொருட்படுத்தாமல் மாறாமல் இருக்கும். இதற்கு நேர்மாறாக, பொருளின் மீது செலுத்தப்படும் ஈர்ப்பு விசையின் அடிப்படையில் எடை மாறுபடும், அதன் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும். இந்த வேறுபாடு இயற்பியலில் முக்கியமானது மற்றும் ஆனால் அதிக குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியது.
பூமியின் நிறை என்பது கிரகத்தைப் பற்றிய நமது புரிதலின் அடிப்படை அம்சமாகும். பூமியை ஒரு தராசில் எடைபோட முடியாது என்றாலும், மற்ற பொருட்களின் மீது அது ஏற்படுத்தும் ஈர்ப்பு விளைவுகளின் மூலம் அதன் நிறை கணக்கிட முடியும். இந்த தகவல்கள் சுவாரஸ்யமானது மட்டுமல்ல, பல்வேறு அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளுக்கு அவசியமானது. நாம் நமது பிரபஞ்சத்தை தொடர்ந்து ஆராயும்போது, பூமியின் நிறை பிரபஞ்ச புதிரின் முக்கிய பகுதியாக இருக்கும்.
மக்கள்தொகை பெருக்கத்தால் செயற்கைக் கோள் செலுத்தப்படுவதால், விண்கல் புவியில் விழுவதால் விமானம் பறப்பதால் புவியின் எடையில் மாற்றம் ஏற்படுமா?
புவியின் நிறை என்பது, புவியில் உள்ள அனைத்து பொருள்களின் மொத்த நிறையாகும். இந்த நிறை பூமியின் வடிவம், அடர்த்தி, மற்றும் அதன் பரப்பளவு ஆகியவற்றைப் பொறுத்தது.
பூமியில் உள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையின் அளவு அந்தப் பொருளின் எடை எனப்படும்.
பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களை நிறையால் அளவிடுவோம்.
புவியின் நிறை M⊕ = 5.9722×10^24 Kg, (5 972 200 000 000 000 000 000 000 Kg)
இப்போது பதிலுக்கு வருவோம்.
மக்கள்தொகை பெருக்கத்தால் புவியின் எடையில் மாற்றம் ஏற்படுமா? பூமியில் புதிதாக எதுவும் உருவாகுவதில்லை. அதேபோல் அழிவதும் இல்லை.
ஒரு நிலையில் இருக்கும் அணு மற்றொரு வித அணுவாக உருமாற்றம் பெறுகிறது.
மனிதன், விலங்குகள், தாவரங்கள் உள்ளிட்ட எந்த ஒன்றும் உருவாக புவியின் வெளிப்பகுதியில் இருந்து அதற்கான மூலங்களை கொண்டுவருவதில்லை. மாறாக உருமாற்றம் பெறுகிறது.
எனவே உயிரினங்களின் தோற்றத்தால் புவியின் நிறை மாறாது.
செயற்கைக் கோள் செலுத்தப்படுவதால், விண்கல் விழுவதால் புவியின் எடையில் மாற்றம் ஏற்படுமா?
புவியிலிருந்து புவிமண்டலத்தைத் தாண்டி விண்ணுக்குச் செல்லும் செயற்கை கோள்களால் புவியின் நிறை சற்று குறையும். ஆனால் புவியில் விழும் விண்கற்களால் புவியின் நிறை சற்று அதிகரிக்கும்.
வேறு ஏதேனும் வகையில் புவியின் எடையில் மாற்றம் ஏற்படுமா?
சூரியனில் இருந்து நியூட்ரினோ துகள்கள் புவியை வந்தடைகின்றன. இவை புவியை துளைத்து வெளியில் கடந்துவிடுகின்றனவாம்.
எனினும் சிறிதளவு சில குளோரினுடன் வினைபுரிந்து புவியில் தங்கக்கூடும். இதனால் புவியின் நிறை சற்று அதிகரிக்கும்.
இதேபோல் புவியில் இருந்தும் ஆன்டி நியூட்ரினோ துகள்கள் வெளியேறுகின்றன. இதனால் புவியின் நிறை சற்று குறையலாம்.
இதேபோன்று புவியில் உள்ள உயிரினங்களின் உடலில் ஏன் நமது உடலிலிருந்தும் கார்பனின் சிதைவு காரணமாகவும் நியூட்ரினோ துகள்கள் வெளியேறுகின்றன. இதனால் புவியின் நிறை சற்று குறையலாம்.
விமானம் பறப்பதால் புவியின் எடையில் மாற்றம் ஏற்படுமா?
புவியின் நிறை என்பது புவியின் வளிமண்டலத்தின் நிறையையும் சேர்த்ததுதான். எனவே புவியீர்ப்பு மண்டலத்தில் பறக்கும் எந்த ஒரு விமானத்தாலும் / பொருளாலும் புவியின் நிறையில் மாற்றம் இராது.
புவி மண்டலத்தின் வெளியே செல்லும் செயற்கை கோள்களால் புவியின் நிறையில் மாற்றம் ஏற்படும் எனினும் பூமியின்மீது எரி கற்களும் விழுந்துகொண்டு இருக்கின்றன. எனவே புவியின் நிறையில் அதிக மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று கூற முடியாது.