செய்தி துணுக்குகள்
செய்தி துணுக்குகள் தொடர்பான செய்திகள்.
அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
<p>அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அஇஅதிமுக) கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக, வக்கம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்தவருமான திரு. V.N. ரவி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி திரு. க. பழனிச்சாமி அவர்கள் பிறப்பித்துள்ளார்.</p><p>கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. V.N. ரவி, வக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பணியாற்றியவர். மேலும், அஇஅதிமுகவில் கிளைக் கழகச் செயலாளர், ஊராட்சிக் கழகச் செயலாளர், ஆனைமலை மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.</p><p>இந்நிலையில், அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி திரு. V. ஜெயராமன் அவர்களின் பரிந்துரையின் பேரில், திரு. V.N. ரவி அவர்கள் மாவட்ட துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த நியமனத்தைத் தொடர்ந்து, இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த திரு. V.N. ரவி அவர்களுக்கு இந்த முக்கியப் பொறுப்பை வழங்கிய அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி திரு. க. பழனிச்சாமி அவர்களுக்கும், அவரது பெயரை பரிந்துரை செய்த கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி திரு. V. ஜெயராமன் அவர்களுக்கும், மாவட்ட இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருமதி கஸ்தூரி வாசு அவர்களுக்கும் கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், புதிய பொறுப்பை வழங்கிய கழகத் தலைமையின் நம்பிக்கையைப் பெற்றிடும் வகையில், திரு. V.N. ரவி சிறப்பாகப் பணியாற்றி, மக்கள் மற்றும் கட்சிக்கு மேலும் பல சேவைகளை ஆற்றிட வேண்டும் என்று கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி. மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி மற்றும் மதுக்கரை ஒன்றியச் செயலாளர் டி. சிவசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p>