🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோடை விடுமுறையை கொடைக்கானலில் கொண்டாட வாருங்கள்!

கொரோனா பெருந்தொற்று முழுமுடக்கம் காரணமாக சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களும் இரண்டாண்டுகள் சுற்றுலாத்தளங்களுக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். தற்பொழுது பள்ளி விடுமுறைகள் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் சுற்றுலாத்தளங்களுக்கு படையெடுத்து வரும் அதேவேளையில் பெட்ரோல், டீசல் வரலாறு காணாத அளவு விலை உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் நடுத்தர குடும்பத்தினர் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.


சென்னையில் இருந்து ஒரு குடும்பம் ஊட்டி சென்று இரண்டு நாட்கள் தங்கி திரும்புவதற்கு போக்குவரத்து கட்டணம், தங்கும் இடம், உணவு என ரூபாய் ஒருலட்சம் ஆவதாக உறவுகள் தெரிவிக்கின்றனர். இரண்டு வருடங்கள் தொழில் முடங்கியதால் ரூம் கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் மாதம் இறுதி வரை நீடிக்கப்படும் என்பதால் அவசர அவசரமாக முண்டியடித்து செல்ல வேண்டியதில்லை. ஜூன் முதல் வாரத்தில் இருந்து வாடகை குறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.


நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த நம்மவர்களும் சுற்றுலா செல்ல ஆர்வமாக இருப்பர். அவர்களுக்கு உதவிடும் பொருட்டு கொடைக்கானல் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு www.thottianaicker.com, www.thottianaickermatrimony.com சார்பில் குறைந்த செலவில் ரூம்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. 


கொடைக்கானல் சுற்றுலா செல்வோர் ஒருவார காலம் முன்பாக புக்செய்யலாம். தொடர்புக்கு சதீஷ்: 8110000996; உதவிக்கு : 7395988767 (தொட்டிய நாயக்கர்.காம் அலுவலக எண்)


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved