திரு.R.ரங்கம நாயக்கருக்கு விடுதலைக்களம் நினைவஞ்சலி.
சமுதாய தியாகி R.ரங்கம நாயக்கரின் முதலாமாண்டு புகழஞ்சலி கூட்டம்:-
எர்ரகொல்லா பிரிவை தொட்டிய நாயக்கர் உட்பிரிவில் சேர்த்து MBC சான்றிதழ் கிடைக்க அயராது பாடுபட்ட நாமக்கல், ராமநாயக்கன்பட்டி தெய்வத்திரு.R.ரங்கம நாயக்கரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இராசிபுரத்தில் உள்ள விடுதலைகளம் கட்சியின் தலைமையகத்தில் இன்று (25.08.2021) காலை 9 மணியளவில் நடைபெற்றது. இதில் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், நாமக்கல் தொட்டியநாயக்கர் அறக்கட்டளை தலைவர் பழனிசாமி, ராமநாயக்கன்பட்டி கோவிந்தராஜூ BDO நாகப்பன், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் பட்டக்காரர் சிவகுமார், வழக்கறிஞர் டி .ஆர்.பிரபு, ராஜேஸ்வரி வெங்கடேஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன், விடுதலைக்களம் கட்சி மாவட்ட துணை தலைவர் பூவரசி ராஜேந்திரன், மகளிரணி தலைவர் வசந்தாமணி, அலுவலக செயலாளர் மோகன், பட்டறை சுப்பிரமணியம் மற்றும் பலர் பங்கேற்று அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சமுதாய தியாகி தியாதி திரு.ரங்கம் நாயக்கரின் புகழஞ்சலி கூட்டம் இன்று (25.08.2021) மாலை 7 மணியளவில் காணொளி வாயிலாக நடைபெறவுள்ளது. அனைவரும் வருக...
இவண்,
விடுதலைகளம் கட்சி,
தலைமையகம், இராசிபுரம்.