சென்னையில் மாவீரன் சிலை அமைவிடம் - மக்களின் உணர்வுகளை நிறைவேற்றுக!- தமிழக முதல்வருக்கு அதிமுக பிரமுகர் வேண்டுகோள்!
இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமூகத்தினரின் நீண்டநாள் கோரிக்கையான மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்கும் அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு கட்சி மாட்சரியம் கடந்து நன்றி தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி. ஆனால், மாவீரன் சிலை சென்னையிலுள்ள பிரதான சாலை ஒன்றில் அமைப்பதே அவரின் தியாகத்திற்கு மதிப்பளிப்பதாக இருக்கும் என்பதே ஒட்டுமொத்த சமுதாய மக்களின் விருப்பமாக இருப்பதால், முதல்வர் இதுகுறித்து பரிசீலித்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற காணொளிக்கூட்டத்தில் வலியுறுத்திப்பேசினார் அதிமுக பிரமுகர் அ.காசிராஜன்.