"கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" புத்தகம் பற்றி திரு.லேணா.தமிழ்வாணன் விளக்கம்.
எழுத்தாளர் திரு.தமிழ்வாணன் அவர்கள் எழுதி, மணிமேகலை பிரசுரம் வெளியிட்ட "கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" என்ற புத்தகத்தில் எழுதப்பட்ட பல்வேறு விசயங்கள் உண்மைக்கு புறம்பாகவும், வரலாற்று ஆதாரங்களுக்கு எதிராகவும் உள்ளதை, மாவீரன் கட்டபொம்மன் வம்சாவளியினர் மற்றும் வாரிசுதாரார் திரு.வீமராஜா ஆகியோர் தக்க ஆதாரங்களுடன், மணிமேகலை பிரசுரத்தின் தற்போதைய பொறுப்பாளரும், புத்தக எழுத்தாளர் திரு.தமிழ்வாணன் அவர்களின் குமாரனுமான திரு.லேணா தமிழ்வாணன் அவர்களை நேரில் சந்தித்து விளக்கியதைத் தொடர்ந்து, நடந்து விட்ட தவறுகளுக்கு வருத்தத்தை தெரிவித்த திரு.லேணா தமிழ்வாணன் அவர்கள்,கோடிகளை கொட்டிக்கொடுத்தாலும் இனிமேல் மணிமேகலை பிரசுரம் "கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" என்ற புத்தகத்தை அச்சிடாது என்பதை கோவில்பட்டியைச் சேர்ந்த திரு.அருண் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.திரு.லேணா தமிழ்வாணன் அவர்களின் பேட்டி வீடியோவில் உள்ளது.