🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி நாயகி! - திருமதி.மலர்க்கொடி

திருமதி.மலர்க்கொடி அவர்கள் 06.02.1986-இல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகேயுள்ள புதூரில் திரு.மாரிச்சாமி- திருமதி.வசந்தி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார்.  இவர் இடைநிலை வரை கல்வி பயின்றுள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த திரு.அலெக்ஸ்  பாண்டியன் அவர்களை மணமுடித்துள்ளார்.

திரு.அலெக்ஸ் பாண்டியன் (37) புதூர் கிராமத்தில் திரு.அப்பைய நாயக்கர்- திருமதி. சின்னமாரியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பக்கல்வி வரை பயின்றவர் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார். 

இலகுரக மற்றும் மகிழுந்து வாகன ஓட்டுனராகவும் பணியாற்றும் திரு.அலெக்ஸ்பாண்டியன் பரம்பரை அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். வார்டு செயலாளராக சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமுள்ளவர் தற்பொழுது அதிமுக மாவட்ட பிரதிநிதி பொறுப்பு வகித்து வருகிறார். 

கடந்த பிப்ரவரி'19-ஆம் தேதியன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதூர் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 12-வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தேர்தல் களம் கண்ட முதல் வாய்ப்பிலேயே வெற்றிவாகை சூடியுள்ளார் திருமதி.மார்க்கொடி அவர்கள் தொடர்ந்து அரசியல் களத்தில் அடுத்தடுத்த வெற்றிகளை அடைய வேண்டுமெனவும், எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து தொடர்ந்து மக்கள் பணியை சிறப்புடன் செய்திட வேண்டுமெனவும் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved