அதிமுக ஒருங்கிணைபாளர் ஒபிஸ் துணைவியார் மறைவிற்கு இராஜகம்பளதாரின் ஆழ்ந்த இரங்கல்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் துணை முதல்வருமான திரு.ஒ.பன்னீர்செல்லவம் அவர்களின் மனைவி திருமதி.விஜயலட்சுமி அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (01.09.2021) காலை காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அரசியல் பொதுவாழ்விற்கும், குடும்பத்திற்கும் உற்ற துணையாக, ஆதார சக்தியாக இருந்தவர் திருமதி.விஜயலட்சுமி அவர்கள் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்க்கையில் நீக்கமற வீற்றிருந்த அம்மையாரின் இழப்பு பேரிழப்பு ஆகும். தன் வாழ்க்கை துணையை இழந்து வாடும் திரு.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தாயரை இழந்து வாடும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அவர்களுக்கும் இராஜகம்பளதார் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.