🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சிந்துவம்பட்டி நாட்டாமை இயற்கை எய்தினார்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள சிந்துவம்பட்டி நாட்டாமை திரு.N.P.பெருமாள் நாயக்கர் இயற்கை எய்தினார். 

மறைந்த நாட்டாமை பெருமாள் நாயக்கர் ஆண்டிப்பட்டி இராஜகம்பளத்தார் மலைக்கோவில் சங்கத்துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். 

இவர் தேனி மாவட்ட அமமுக பொறுப்பாளரும், கடந்த சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட திரு.முத்துசாமி அவர்களின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அப்பகுதியில் அரசியல் செல்வாக்கு மிக்கவரான நாட்டாமை பெருமாள் நாயக்கர் மறைவு சமுதாயத்திற்கும், அப்பகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். 

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும்  உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். 

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved