ஈரோட்டில் இமயம் சரிந்தது - இதயம் நொறுங்கியது
சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் உற்ற தோழனாகவும், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், மாரனூர் பட்டகாரரும், தன் வாழ்நாளெல்லாம் சமுதாயப்பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவரும், அனைவரிடத்திலும் அன்போடும், வாஞ்சையோடும் நட்பு பாராட்டி அரவணைத்துச் செல்லும் அன்பு நெஞ்சம் கொண்டவரும், தன் வயதையும் பொருட்படுத்தாமல் பலநூறு கிலோமீட்டர் பயணித்து சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்று எங்களுக்கு உற்ற தோழனாகவும், ஊக்கசக்தியுமாக விளங்கிய பட்டகாரர் T.நடராஜன் அவர்கள் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைகிறோம்.
நூற்றாண்டு பாரம்பரியமும், பலதலைமுறை பட்டக்காராகவும் இருந்து சமுதாயத்தின் அடையாளமாகவும் வழிகாட்டிகளாகவும், பாதுகாவலர்களாகவும் இருந்து வரும் குடும்பத்தை சேர்ந்த பட்டகாரர் T.நடராஜன் அவர்களின் மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.