🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாட்டாமை சீனிராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், கோடிய பொம்மிநாயக்கன்பட்டி ஊர்நாட்டாமை சீனிராஜ் (68) அவர்கள் இன்று மதியம் உடல்நலக்குறைவால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஊர்நாட்டாமை சீன்ராஜ் அவர்கள் மத்திய பொதுப்பணித்துறையில் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற பொறியாளரும், சமூகநீதி கூட்டமைப்பின் மூத்த தலைவருமான் திரு.பெ.இராமராஜ் அவர்களின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கோடியபொம்மிநாயக்கன்பட்டியில் விவசாயம் செய்துவரும் சீனிராஜ் அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

மூத்த சகோதரரை இழந்து வாடும் பொறியாளர் திரு.இராமராஜ் அவர்களுக்கும், நாட்டாமையை இழந்துவாடும் கோடிய பொம்மிநாயக்கன்பட்டி ஊர்பொதுமக்கள்  மற்றும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved