ஈச்சனாரி ஊர்நாயக்கர் இயற்கை எய்தினார் - ஆழ்ந்த இரங்கல்
சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த ஆலோசகரும், நன்கொடையாளரும், தொழிலதிபருமான Rtn.PHF.C.முத்துசாமி அவர்களின் தந்தையாரும், கோவை மாவட்டம், ஈச்சனாரி ஊர்நாயக்கருமான N.சின்னச்சாமி நாயக்கர் (90) அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு 8 மணியளவில் இயற்கை எய்தினார்.
பல நூற்றாண்டுகாலத்திற்கு மேலாக ஈச்சனாரி ஊர்நாயக்கர் பொறுப்பிலுள்ள சின்னச்சாமி அவர்களின் குடும்பம், கொங்கு மண்டலத்தில் சமுதாயத்தின் முக்கிய அடையாளமாக விளங்கி வருகிறது. பாரம்பரியமும், பெருமையுமிக்க குடும்பத்தின் வாழையடி வாழையாக ஈச்சனாரி ஊர்நாயக்கர் பொறுப்புக்கு வந்த சின்னச்சாமி அவர்கள், புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் அறங்காவலராகவும், கோவில் புணரமைப்பு பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திகொண்டு, கம்பளத்தாரின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் காக்கும் அரணாக விளங்கிய சின்னச்சாமி நாயக்கர் அவர்களின் மறைவு சமுதாயத்திற்கும், ஈச்சனாரி ஊர்மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்,நண்பர்கள் மற்றும் ஈச்சனாரி கிராம மக்கள் அனைவருக்கும் சென்னை, வீ.க.பொ. இராஜகம்பள சமுதாயத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.