புலி நாயக்கர் தாயார் மறைவு - தலைவர்கள் இரங்கல்.
விருதுநகர் மாவட்டம், பாவாலி சந்திரகிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பி.கே.போவக்கம்மாள் (வயது 82) நேற்று இரவு வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.
மறைந்த பி.கே.போவக்கம்மாள் விருதுநகர் ஒன்றியம் 19-வார்டு ஒன்றியக்குழு உறுப்பினரும், தி.மு.க.விருதுநகர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவரும், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மாநில துணைத்தலைவரும், தொழிலதிபருமான புலி நாயக்கர் (எ) திரு.பி.கே.சங்கர்ராஜ் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.கே.போவக்கம்மாள் அவர்களின் இறுதிச்சடங்கு இன்று (25.02.2023) மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ள நிலையில், சந்திரகிரிபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது பூத உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தாயாரை இழந்து வாடும் புலி நாயக்கர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளது.