🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகசேவகி கௌரி சுரேஷ் தந்தையார் மறைவு

கோவை மாவட்டம், ஈச்சனாரியைச் சேர்ந்தவரும், தட்ஸ் மை சைல்ட் என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவன தலைவர்களில் ஒருவரும், சிறந்த சமூகசேவகியுமான திருமதி.கௌரி சுரேஷ் அவர்களின் தந்தையுமான திரு.V.S.மணியன் (எ) V.சுப்பிரமணியன் (83) இன்று முற்பகல் 11 மணியளவில் கோவையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவை மதுக்கரையிலுள்ள ஏசிசி சிமென்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த திரு.மணியன் அவர்கள் பணி ஓய்விற்குப்பின் கோவைப்புதூரில் குடும்பத்தினரோடு வசித்து வந்தார். சிறந்த சமுதாயப்பற்றாளரான மணியன் சமுதாய இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்து வந்தவர். தந்தையாரை இழந்துவாடும் சமூகசேவகி திருமதி.கௌரிசுரேஷ் அவர்களுக்கும், அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved