ஓய்வுபெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!
இரங்கல் செய்தி:
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஒன்றியம், பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சார்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை துணை ஆய்வாளரும், சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளர்களில் ஒருவருமான M.ராமராஜ் அவர்கள் நேற்று (10.08.2023) வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார்.
எம்.ராமராஜ் அவர்கள் விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி அனைத்து சமுதாய மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நன்பர்களுக்கு சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், அன்னாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (13.08.2023) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள சங்கத்தின் மாதாந்திரக்கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
எனவே. சங்க உறுப்பினர்கள், சமுதாய சொந்தங்கல் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
வீ.க.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.