ஊர் நாயக்கர் - மு.ஊராட்சி மன்ற தலைவர் காலமானார்.
கோவை மாவட்டம் மாச்சநாயக்கன் பாளையம் ஊர் நாயக்கரும், சீரபாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான எம். மகாலிங்கம் அவர்கள் நேற்று இரவு காலமானார். அன்னாரின் மறைவுக்கு சமுதாய தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஊர் நாயக்கர் எம். மகாலிங்கம் அவர்களின் பூதஉடலுக்கு கோவை மாவட்ட ராஜ கம்பள சமுதாய நல சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் கே.டி. மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் எம் சிவக்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அனைத்து ஊர் நாயக்கர்கள் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.