🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக மாவட்ட பிரதிநிதியின் துணைவியார் காலமானார்- தலைவர்கள் இரங்கல்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், குள்ளக்காபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பிரதிநிதியுமான திரு.சம்பத் அவர்களின் துணைவியார் திருமதி.அம்சவேணி அம்மையார் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். 

அம்சவேணி அம்மையாரின் மறைவுக்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஸ்ணன், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் எம்.சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அம்சவேணி அம்மையாரின் திடீர் மறைவுச் செய்திகேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், துணைவியாரை இழந்துவாடும் திரு,சம்பத் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர். 

குள்ளக்காபாளையத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மையாரின் பூத உடலுக்கு ஒன்றியக்கவுன்சிலர் மாசிலாமணி, இளைஞரணி தலைவர் குணசேகரன் உள்ளிட்ட தலைவர்களும், பலவேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved