தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஐரோப்பாவில் ஆட்டம் காணும் மதச் செல்வாக்கு! அறிவியலின் வளர்ச்சியா? சமூக மாற்றமா? • யக்ஷன் கேட்ட கேள்விகள்! நீதியைத் தேர்ந்தெடுத்த யுதிஷ்டிரர் • பிழைப்புக்காக இடம்பெயர்ந்த நாம்… வாய்ப்புகளை உருவாக்கும் தலைமுறையாக மாறுவோம்! • சென்னையா நாயக்கர்-உழைப்பால் உயர்ந்து, சமுதாயத்திற்காக வாழ்ந்த ஒரு சரித்திரம் • உலகறிந்த மாவீரனை 16 வயதில் தொழுநோயோடு எதிர்த்து வென்ற இளம் மன்னன்! – வரலாறு கற்றுக்கொடுக்கும் பாடம் • ஐரோப்பாவில் ஆட்டம் காணும் மதச் செல்வாக்கு! அறிவியலின் வளர்ச்சியா? சமூக மாற்றமா? • யக்ஷன் கேட்ட கேள்விகள்! நீதியைத் தேர்ந்தெடுத்த யுதிஷ்டிரர் • பிழைப்புக்காக இடம்பெயர்ந்த நாம்… வாய்ப்புகளை உருவாக்கும் தலைமுறையாக மாறுவோம்! • சென்னையா நாயக்கர்-உழைப்பால் உயர்ந்து, சமுதாயத்திற்காக வாழ்ந்த ஒரு சரித்திரம் • உலகறிந்த மாவீரனை 16 வயதில் தொழுநோயோடு எதிர்த்து வென்ற இளம் மன்னன்! – வரலாறு கற்றுக்கொடுக்கும் பாடம்
விளம்பரங்கள்
அரண்மனையார் பொன்னுசாமி எர்ரப்பகவுண்டர் துணைவியார் இயற்கை எய்தினார் - கண்ணீர் அஞ்சலி

அரண்மனையார் பொன்னுசாமி எர்ரப்பகவுண்டர் துணைவியார் இயற்கை எய்தினார் - கண்ணீர் அஞ்சலி

Radheyan 16 Dec 2023 | 07:24 PM
பகிர்:

கோவை மாவட்டம், பொள்ளாச்சி-ஆனைமலை (மாசானியம்மன் கோவில்) அருகேயுள்ளது இராமச்சந்திராபுரம் கிராமம். இக்கிராமத்தைச்சுற்றிலும் அமைந்துள்ள பல கிராமங்கள் "எர்ரப்ப கவுண்டர்' வம்சாவளியைச்  சேர்ந்த இராஜகம்பளத்தார் சமுதாய அரண்மனையாரால் நிர்வாகிக்கப்பட்டு வந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற சின்னக்கவுண்டர் திரைப்படம் இங்கு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இராமச்சந்திராபுரம் சின்ன அரண்மனையார் தெய்வத்திரு.பொன்னுசாமி எர்ரப்ப கவுண்டர் அவர்களின் துணைவியாரும், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளர் திரு.முத்துமாணிக்கம் மற்றும் கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் திரு.இராஜேந்திரன் (இன்ஸ்பெக்டர்-ஓய்வு) ஆகியோரின் மாமியாருமான திருமதி. மாணிக்கம்மாள் (வயது-84) வயது மூப்பு காரணமாக நேற்று மாலை 5.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

அம்மையாரின் மறைவுக்கு சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணைஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மாவட்டத்தலைவர் குணசேகரன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண