தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஐரோப்பாவில் ஆட்டம் காணும் மதச் செல்வாக்கு! அறிவியலின் வளர்ச்சியா? சமூக மாற்றமா? • யக்ஷன் கேட்ட கேள்விகள்! நீதியைத் தேர்ந்தெடுத்த யுதிஷ்டிரர் • பிழைப்புக்காக இடம்பெயர்ந்த நாம்… வாய்ப்புகளை உருவாக்கும் தலைமுறையாக மாறுவோம்! • சென்னையா நாயக்கர்-உழைப்பால் உயர்ந்து, சமுதாயத்திற்காக வாழ்ந்த ஒரு சரித்திரம் • உலகறிந்த மாவீரனை 16 வயதில் தொழுநோயோடு எதிர்த்து வென்ற இளம் மன்னன்! – வரலாறு கற்றுக்கொடுக்கும் பாடம் • ஐரோப்பாவில் ஆட்டம் காணும் மதச் செல்வாக்கு! அறிவியலின் வளர்ச்சியா? சமூக மாற்றமா? • யக்ஷன் கேட்ட கேள்விகள்! நீதியைத் தேர்ந்தெடுத்த யுதிஷ்டிரர் • பிழைப்புக்காக இடம்பெயர்ந்த நாம்… வாய்ப்புகளை உருவாக்கும் தலைமுறையாக மாறுவோம்! • சென்னையா நாயக்கர்-உழைப்பால் உயர்ந்து, சமுதாயத்திற்காக வாழ்ந்த ஒரு சரித்திரம் • உலகறிந்த மாவீரனை 16 வயதில் தொழுநோயோடு எதிர்த்து வென்ற இளம் மன்னன்! – வரலாறு கற்றுக்கொடுக்கும் பாடம்
விளம்பரங்கள்
வீரசக்கதேவி ஆலயக்குழு மு.துணைத்தலைவர் மறைவுக்கு இரங்கல்!

வீரசக்கதேவி ஆலயக்குழு மு.துணைத்தலைவர் மறைவுக்கு இரங்கல்!

Radheyan 05 Dec 2025 | 06:54 PM
பகிர்:

பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்குழு முன்னாள் துணைத்தலைவரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விளாத்திக்குளம் மேற்கு ஒன்றிய அவைத் தலைவருமான திரு வீ.வீ.துரைராஜ் நாயக்கர் அவர்கள் நேற்று (04.12.2025) அதிகாலை இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவுக்கு சமுதாயத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு, 

பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்குழுவின் துணைத்தலைவராக இருந்தவர் சிங்கிலிபட்டியைச் சேர்ந்த துரைராஜ் நாயக்கர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் அபிமானத்தைப்பெற்றவரான் துரைராஜ் நாயக்கர், விளாத்திக்குளம் பகுதியில் மதிமுக-வின் அடையாளமாக அறியப்பட்டவர். தவிர, வீரசக்கதேவி ஆலயக்குழுவில் துணைத்தலைவராக பொறுப்புவகித்த காலத்தில் அப்பகுதியிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி சித்திரைத் திருவிழாவிற்கு ஜோதி கொண்டுசெல்வதை ஒருங்கிணைத்து பிரபலப்படுத்தியவர். வயது மூப்பின் காரணமாக ஓய்வில் இருந்த துரைராஜ் நாயக்கர் நேற்று (04.12.2025) அதிகாலை இயற்கை எய்தினார்.

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், பெரியவர் துரைராஜ் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சி ஆலயப்பணிகளில் செய்திட்ட அரும்பணிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு ஆகியவை என்றும் நினைவில் கொள்ளத்தக்கவை என்று குறிப்பிட்டுள்ளார். 

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண