DNT-இட ஒதுக்கீடு இழைக்கப்பட்ட அநீதி பற்றி அறிந்துகொள்வோம்-பகுதி-6
ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் அறிக்கையின் அடிப்படையில் சட்டம் 8/2021 கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் ஆணையம் 7.10.2020 மற்றும் 21.1.2021 தேதிகளில் கூடியபோது எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் இந்திரா ஷஹானி வழக்கில் பத்தி 123ல் ஆணையத்தின் பரிந்துரையைத்தான் அரசு ஏற்கவேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. எனவே எந்த சமூகத்தையும் கலந்து ஆலோசிக்காமல் தலைவர் பரிந்துரை செய்யவும் முடியாது, அதை ஏற்று அரசு சட்டம் இயற்றவும் முடியாது. எனவே எல்லா சட்ட மரபுகளையும் மீறி 115 சமூக மக்களின் உரிமைகளை பறித்தது அநாகரிகத்தின் உச்சம்.
நன்றி..
தொட்டியநாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் 115 சமூக அமைப்புக்கள்.