மீண்டும் திரண்டது விஜயநகரப்படை! மிரண்டுபோனது மதுரை மாநகர்!
மதுரை மாநகர்... கம்பளத்தார்களின் வீரம் செரிந்த வரலாற்றை பறைசாற்றும் மண். கம்பளத்தார்களின் ஊணோடும், உதிரோடும் கலந்துவிட்ட வீரகாவியம். கம்பிளி பேரரசின் மஹாராணி கங்காதேவியின் கண்ணசைவில் மாலிக்கபூர் சுல்தானின் ஆட்சி வீழ்த்தப்பட்டு விஜயநகரப்பேரரசின் வராகக்கொடி பறக்கவிடப்பட்டு, 250 ஆண்டுகாலம் கம்பளத்தார்களின் வரலாற்றை வைகைக்கறையில் எழுதிட்ட வீரம் செறிந்த மண். அப்படிப்பட்ட மதுரை மண்ணில் அமைந்துள்ள பாஞ்சை பெருவேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது ஜெயந்திக்காக இன்று (03.01.2021) தென்மாவட்டங்களில் இருந்து திரண்ட கம்பளத்தார் இளைஞர் படை மதுரையில் நுழைந்தபொழுது, துவார சமுத்திரத்திலிருந்து புறப்பட்ட கம்பளத்தார்களின் விஜயநகரப்படை மீண்டும் மதுரைக்குள் நுழைந்ததுபோல் இருந்தது கண்டு மிரண்டு நின்றது மதுரை மாநகர்.