தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திருமண வரவேற்பு விழா - தலைவர்கள் நேரில் வாழ்த்து

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திருமண வரவேற்பு விழா - தலைவர்கள் நேரில் வாழ்த்து

Radheyan 25 Nov 2024 | 08:17 PM
பகிர்:

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திருமண வரவேற்பு விழா - தலைவர்கள் நேரில் வாழ்த்து!

நாமக்கல் மூத்த வழக்கறிஞரும், இராஜகம்பளத்தார் சமுதாய மூத்த தலைவருமான திரு.பழனிச்சாமி அவர்களின் இல்ல திருமண வரவேற்புவிழா நேற்று (24.11.2024) மாலை நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையிலுள்ள ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் விவரம் வருமாறு,

நாமக்கல் மூத்த வழக்கறிஞரும், மதிமுக பிரமுகருமான திரு.பி.பழனிச்சாமி அவர்களின் பெயரனும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான பி.ஆர்.வினீத், திருப்பூர் சக்தி முருகன் டையிங், ஸ்ரீவாரி டிரேடர்ஸ் உரிமையாளருமான திரு.தேவராஜ் அவர்களின் மகள் டி.பிரியதினிஷா ஆகியோரது திருமண வரவேற்புவிழா நேற்று (24.11.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஸ்ரீ லட்சுமி திருமண மாளிகை-யில் நடைபெற்றது.

திருமண வரவேற்புவிழாவி கோவை இராமகிருஷ்ணா மருத்துவமனை நரம்பியல்துறை தலைமை மருத்துவர் அசோகன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், இராஜகம்பளத்தார் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.இராமராஜ், இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.பவுல்ராஜ், பண்பாட்டுக்கழக மாநில காப்பாளர் மோதூர் முனுசாமி, ஜே.எம்.பழனியப்பன், முத்துசாமி, கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி,   மற்றும் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


மேலும், மணமக்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜமீன்தார்கள்,சமுதாய தலைவர்கள், அரசியல் கட்சிப்பிரமுகர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு P.R.Vineeth thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண