காற்று மற்றும் தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிப்பு!
கோட்பாட்டிலும் நடைமுறையிலும், காற்றிலும் (CO₂) தண்ணீரிலும் (H₂O) இருந்து எரிபொருள் தயாரிக்க முடியும். இதை பொதுவாக “செயற்கை எரிபொருள்” (synthetic fuel / e-fuel) என்று அழைக்கிறார்கள்.என்பதை ஜப்பான் வெற்றிகரமாக நிரூபித்துள்ளது.
ஜப்பானின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் ENEOS, யோகோஹாமா ஆராய்ச்சி மையத்தில் ஒரு சிறப்பு டெமோ ஆலை அமைத்துள்ளது. இந்த தொழில்நுட்பம் காற்றிலிருந்து CO₂-ஐ பிடித்து, தண்ணீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்து, இரண்டையும் சேர்த்து செயற்கை திரவ எரிபொருளாக மாற்றுகிறது.
மின்சாரம் பயன்படுத்தி தண்ணீரை பிரித்து ஹைட்ரஜன் எடுக்கிறது: 2H2O→2H2+O2, இதை electrolysis என்பார்கள். காற்றிலிருந்து CO₂ பிடிக்கிறது. இதை Direct Air Capture தொழில்நுட்பம் செய்கிறது.ஹைட்ரஜன் + CO₂ சேர்த்து எரிபொருள் உருவாக்குகிறது. உதாரணம்: மெத்தனால், செயற்கை டீசல், விமான எரிபொருள் போன்றவை.
மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் — இந்த எரிபொருளை பயன்படுத்த வாகனங்களில் எந்த மாற்றமும் தேவையில்லை! ஏற்கனவே உள்ள இன்ஜின்களிலேயே இது செயல்பட்டது. மேலும் CO₂ மறுபயன்பாடு ஆகிறதுசூரிய/காற்றாலை மின்சாரத்தை “சேமித்த” எரிபொருளாக மாற்றலாம்.
இந்த ஆலை தற்போது ஒரு நாளுக்கு சுமார் 159 லிட்டர் செயற்கை எரிபொருள் தயாரிக்க முடிகிறது.
இதனால் எதிர்காலத்தில் எண்ணெய் கிணறுகள், பெரிய டேங்கர் கப்பல்கள், வெளிநாட்டு எண்ணெய் சார்பு போன்றவை குறைய வாய்ப்பு உள்ளது. உலகின் எந்த பகுதியிலும் காற்றும் தண்ணீரும் இருந்தால் எரிபொருள் தயாரிக்கலாம் என்ற நிலை உருவாகலாம்.
ஆனால் தற்போது இதன் மிகப்பெரிய சவால் செலவு தான். குறிப்பாக Green Hydrogen தயாரிப்பதற்கான மின்சாரம் மற்றும் தொழில்நுட்ப செலவுகள் அதிகமாக உள்ளன.
அறிவியல் வெற்றி பெற்றுவிட்டது. இப்போது இதை மலிவான முறையில் உலகம் முழுவதும் கொண்டு செல்வதே அடுத்த கட்டம். ஏனெனில் மிகவும் அதிக மின்சாரம் தேவை, செலவு அதிகம், முழுமையாக “பசுமை” ஆக இருக்க renewable energy அவசியம், நேரடியாக battery பயன்படுத்துவதை விட efficiency குறைவு போன்ற சவால்களைக் கடக்க வேண்டும்.
டெஸ்லா உள்ளிட்ட முன்னனி நிறுவனங்கள் இதில் மிகுந்த ஆர்வங்காட்டி வாருவதால் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.

