ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காலமானார்- ஆழ்ந்த இரங்கல்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஜில்லேப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் கிளைத்தலைவருமான திரு.V.ரங்கசாமி (41) அவர்கள் இன்று (27.06.2022) அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்துமுன்னனியில் இணைந்து பொதுவாழ்க்கையைத் தொடங்கிய திரு.ரங்கசாமி அவர்கள், பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்தார். கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஜில்லேப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.ரங்கசாமி, கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபொழுது நேரடியாக களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.
சமுதாயத்தில் வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட திரு.ரங்கசாமி அவர்கள், இளம் வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்தது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. காலமான திரு.ரங்கசாமி அவர்களுக்கு கார்த்திகாயினி என்ற மனைவியும், சுபரஞ்சனி, கோவர்த்தினி என்ற இருமகள்கள் உள்ளனர்.
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், ஜில்லேப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி மக்களுக்கும் அழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.