கார்த்திகை தீப திருநாள் உருவான கதை!
நம் முன்னோர்களின் வாழ்க்கையிலும் வரலாற்றிலும் தமிழ் மக்களின் மங்கள பொருளாக கருதப்படுவது தீபம். தமிழர்கள் கொண்டாடப்படுகிற பல விழாக்களில் கார்த்திகை தீபமும் ஒன்று. கார்த்திகை தீப வழிபாட்டிற்கு மண் அகல் விளக்குகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இந்த மாதம் முழுவதும் மாலை நேரத்தில் வீடுகளின் வாசலில் விளக்கேற்றி வழிபடுகின்றனர். இந்த கார்த்திகை மாதம் அழிக்கும் கடவுளான சிவனுக்கும், தமிழ் கடவுளான முருகனுக்கும், காக்கும் கடவுளான பெருமாள் கடவுளுக்கு உகந்த மாதமாக பக்த கோடிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.
கார்த்திகை என்பது பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் தமிழர்கள் வீட்டிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாக கொண்டாடும் நாளாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கார்த்திகை நாளை (06.12.2022)செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக கொண்டாட பட உள்ளது.
தீபம் தோன்றிய கதை:
நெருப்புக்குரிய புனித ஸ்தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன் மாலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரையில் இந்த தீபம் ஏற்றப்படும்.
கார்த்திகை தீபம் சிறப்பு:
இந்நன்னாளில் அனைவரின் வீடுகளிலும் அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி பஞ்சாலோ அல்லது திரியாலோ ஆன திரியை போட்டு விளக்கேற்றி பூஜை செய்து விட்டு அந்த விளக்குகளை வீட்டின் வாசல், நிலைப்பகுதி, ஜன்னல் ஆகிய பகுதிகளில் ஏற்றி வைப்பார்கள். இரவே பகலாக தெரியும் அளவிற்கு தெருக்கள் தோறும் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இந்த தீப திருநாள் மூன்று நாள் கொண்டாடப்படுகிறது.
கிழக்கு நோக்கி வீட்டு வாசலில் அவரை இலையில் மாட்டு சாணம் வைத்து அதன் மேல் தீபம் ஏற்றியும், வீடுகளுக்கு உள்ளேயும், வெளியிலும் சிறிய அகல் விளக்குகளை ஏற்றி இல்லத்தை அலங்கரிப்பார்கள். கார்த்திகை அன்று வானில் ஏராளமான நட்சத்திரங்கள் தோன்றினாலும் அவற்றில் ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமாக இருக்கும். அதில் பிராகசமாக காணப்படும் ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திர கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கார்த்திகை திருநாளில் வீடு முழுவது அகல் விளக்கின் ஒளி பரவட்டும். அனைத்து நலன்களும், வளங்களும் பெற்று கார்த்திகை தீபம் திருளாலை சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள்.