மின் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க உள்ளாட்சி தலைவர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் அநியாய மின் கட்டண கொள்ளையை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் இன்று (21.07.2020) காலை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டையில் நடைபெற்ற கருப்புக்கொடி போராட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்.திருமதி.ஜெயமணி முருகேசன், விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.கலையரசி வரதராஜ், இராசிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய துணைத்தலைவர் திருமதி.சந்திரா சிவக்குமார், சத்தியமங்கலம், செண்பகபுதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.V.N.சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.