🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரும்புவிடும் அரசியல் பெண் ஆளுமை!

திருமதி.M.தனலட்சுமி அவர்கள் 17.08.1975-இல் கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம் நஞ்சன்கோடு என்ற பகுதியில் அமரர்.மல்ல நாயக்கர் - காளியம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். சத்தியமங்களத்தை பூர்வீகமாகக் கொண்ட மல்ல நாயக்கர் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த காரணத்தால் அவரது குடும்பம் மைசூரில் சிலகாலம் வசித்து வந்தது. ஆரம்பக்கல்வி முதல் உயர்நிலைக்கல்வி வரை சத்தியமங்கலத்திலுள்ள ஜான் டி பிரிட்டோ பள்ளியில்  பயின்ற திருமதி.தனலட்சுமி அவர்கள், மேல்நிலைக்கல்வியை சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், தொலைதூரக்கல்வியில் இளங்கலை வரலாறும் பயின்றார். 1992-இல் பெருந்துறை அருகேயுள்ள குன்னத்தூரைச் சேர்ந்த B.Com பட்டதாரியான K.C.இராஜேந்திரனை மணந்துள்ள இத்தம்பதிக்கு K.R.சுரேஷ் பிரசாந்த் B.E., என்ற மகன் உள்ளார். 



பாரம்பரிய இடதுசாரி இயக்க குடும்பத்தில் பிறந்தவரான K.C.இராஜேந்திரன் தீவிர திராவிட இயக்கப்பற்றாளர். சுமார் முப்பதாண்டுகளுக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக நீடித்து வருகிறார். 1996-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் குடும்ப பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்டு குன்னத்தூர் பேரூராட்சி 7-வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக களமிறங்கி முதல் வெற்றியை பதிவு செய்தார் திருமதி.தனலட்சுமி. தனித்து இயங்கும் வல்லமையும், துணிச்சலும் மிக்கவரான திர்மதி.தனலட்சுமி அவர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினராக சிறப்பான மக்கள் பணியாற்றியவர் 2001-இல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக மீண்டும் களமிறங்கியபோது ஆளும் அதிகார பலத்தின் கடும் நெருக்கடிகளுக்கிடையே ஒருசில வாக்குகளில் தோல்வியை தழுவினார். 

இதனையடுத்து குடும்பவாழ்வில் கவனம் செலுத்தி தன் ஒரே மகனை பொறியாளாராக்கும் வரை தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்தவர், மீண்டும் அரசியல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக அடியெடுத்து வைத்தார். 2016-இல் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் கழகம் வாய்ப்பை மறுத்தபொழுது சுயோட்சை வேட்பாளராக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

2016-2021 காலகட்டதில் கட்சிப்பணியில் தீவிரமாக செயல்பட்டவர் மாவட்டக் கழக முன்னனி தலைவர்களின் அறிமுகத்தைப் பெற்றவர். எதையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு போராடிப்பார்க்கும் இயல்பைப்பெற்றவரான திருமதி.தனலட்சுமி கணவர் தனியார்துறையில் பணியாற்றினாலும் தொடர்ந்து தனித்தே இயக்கப்பணியில் ஈடுபடுதிக்கொண்டவர். இதன்பலனாக 2019-இல் நடைபெற்ற பெருந்துறை சட்டமன்றத் தொகுதி  இடைத்தேர்தலில் கழகத்தின் சார்பில் மகளிர் அணியிலிருந்து பணியாற்றிய ஒரே பொறுப்பாளர் திருமதி.தனலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.



குன்னத்தூர் பேரூராட்சியின் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக தடம்பதித்துக்கொண்ட திருமதி.தனலட்சுமி அவர்கள் இம்முறை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் குன்னத்தூர் பேரூராட்சியின் 9-வது வார்டில் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கி மகத்தான வெற்றி பெற்றார். சமுதாயத்தின் சார்பில் தனித்த ஒருவர் மட்டுமே என்றாலும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு இறுதிவரை போராடியவர். கழகமே குடும்பமாக தலைமுறை தலைமுறையாக கட்சியில் இருக்கும் கம்பளத்தார் சமுதாய ஆண்களே உட்கட்சிப்போட்டியில் வெல்லமுடியாமல் தத்தளிக்கும் பொழுது, ஒற்றை பெண்ணாய் ஆணாதிக்க சமூகத்தில், ஆதிக்கம் மிகுந்த கட்சியில் உரிமையை போராடிப்பெரும் துணிச்சலை திருமதி.தனலட்சுமி பெற்றிருப்பது கம்பளத்தார் சமுதாயத்தின் அதிசயமே.  தெளிவான பேச்சும், சிந்தனையும் கொண்ட திருமதி.தனலட்சுமி பேரூராட்சி மன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டு அரசியலில் அடுத்தடுத்த படிநிலைகளில் ஜொலிப்பார் என்பதில் ஐயமில்லை. திருமதி.தனலட்சுமி அவர்களின் கனவுகள் நனவாக, தான் விரும்பும் உயரங்களைத்தொட அன்புடன் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved