தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
நகராட்சியில் வெற்றிகண்ட நாயகர்கள்!

நகராட்சியில் வெற்றிகண்ட நாயகர்கள்!

Radheyan 15 Jun 2022 | 03:59 PM
பகிர்:

திரு.R.S.சரவணன் அவர்கள் 15.02.1978-இல் விருதுநகர் மாவட்டம், முத்துராமன்பட்டியில் திரு.சுந்தரராஜ் - திருமதி. வேலம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். ஆரம்பக்கல்வி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி S.மாரீஸ்வரி என்ற மனைவி உள்ளார். 

தந்தையார் சுந்தரராஜ் அவர்கள் விவசாயப்பணியோடு, நகராட்சி ஒப்பந்ததாரராகவும் இருந்தவர். அதனடிப்படையில் நேரடி அரசியலில் பங்கேற்காவிட்டாலும், அரசியல் சார்புநிலையோடு இருந்தவர். தந்தையாரின் அரசியல் பின்புலத்தோடு சிறுவயது முதலே அதிமுக அபிமானியாக இருந்த சரவணன், பின்னாளில் கிளைக்கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த பத்தாண்டுகளாக அப்பதவியில் இருந்துவரும் சரவணன், நகர மீனவர் அணிச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். கட்சிப்பணிகளில் தீவிரமாக பணியாற்றி தலைமையின் அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ள சரவணன் விருதுநகர் நகர கூட்டுறவு சங்கத்தின் இயக்குனராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.


சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் கட்சிக்காக தீவிர களப்பாணியாற்றிய அனுபவமுள்ள சரவணன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது, 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, ஆளும் அதிமுக வேட்பாளராக இரட்டைய்லை சின்னத்தில் போட்டியிட்ட சரவணன்,  சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், மக்களின் நன்மதிப்பையும், ஆதரவையும் பெறும் வகையில் செயல்பட்டு, 2022'பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மறுசீரமைக்கப்பட்ட விருதுநகர் நகராட்சியின் 31-வது வார்டில், எதிர்க்கட்சியாகவுள்ள அதிமுக சார்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றிபெற்றார். முதல்முறையாக நகர மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரவணன், சிறப்பாக மக்கள் பணியாற்றி வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Mr.Saravananan thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண